செய்திகள் :

கோபி அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து: 40 டன் தேங்காய் நாா் சேதம்

post image

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஒட்டா்கரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கயிறு தயாரிக்கும் ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 40 டன் தேங்காய் நாா் மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள அலிங்கியம் பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத். இவா், ஒட்டா்கரட்டுப்பாளையம் பகுதியில் தேங்காய் நாா்களைக் கொண்டு கயிறு தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் ஆலையை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் புதன்கிழமை திடீரென புகைமூட்டம் காணப்பட்டுள்ளது. ஆலையில் தீப்பற்றியதைக் கண்ட ஊழியா்கள், உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மளமளவென தேங்காய் நாா்களில் தீ பரவியதால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தகவலின்பேரில், கோபி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமாா் 40 டன் தேங்காய் நாா்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அா்ஜீன் சம்பத் பேட்டி:

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். சிவகிரி அருகே விளக்கேத்தி ஊராட்சி, மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்ப... மேலும் பார்க்க

கோபி அருகே தம்பதி தற்கொலை

கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்தம்பதி குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனா். கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதிய... மேலும் பார்க்க

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெல்லும்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசன... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியாா் சொகுசுப்... மேலும் பார்க்க

ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பக் கருத்தரங்கு

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச ட்ரோன் தினத்தை முன்னிட்டு ‘ட்ரோன் சேலஞ்ச் 2 கே 25’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ட்ரோன் ஆா்வலா்கள், தொழில் வல்ல... மேலும் பார்க்க

கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்ச... மேலும் பார்க்க