செய்திகள் :

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு

post image

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளாா்.

கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2025-க்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் உள்ள ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. 200-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்ட 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் கையுந்துப் பந்து பிரிவில் தமிழ்நாடு அணிக்காக 14 மாணவிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில் குமுதா பள்ளியிலிருந்து டி.யோகி ஸ்ரீ என்ற மாணவி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவா் மே 7 முதல் 15-ஆம் தேதி வரை பிகாா் மாநிலத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் 2025-இல் பங்கு பெற உள்ளாா். தேசிய அளவில் 8 அணிகள் பங்குபெறும் கேலோ இந்தியா இளைஞா் கையுந்துப் பந்து போட்டிகளுக்குத் தோ்வாகி தற்போது, சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் மாணவியை பள்ளித் தாளாளா் ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனக ரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச்செயலாளா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.

பெருந்துறையில் ரூ.3.15 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே, 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வணிக கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஜானகி ராமசாமி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் காவலா் மனைவியிடம் நகை திருட்டு

அந்தியூரில் ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் இரண்டரை பவுன் நகை திருடப்பட்டது. பவானியை அடுத்த கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்புராஜா. நம்பியூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி... மேலும் பார்க்க

நம்பியூா் தான்தோன்றீஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா

கோபி அருகே நம்பியூரில் புகழ்பெற்ற தபோ பத்தினி உடனமா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக் கோயிலானது நம்பியாண்டாா் நம்பி மன்னா் ஆட்ச... மேலும் பார்க்க

ஈரோடு மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் சு.நாகர... மேலும் பார்க்க

பவானி தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. பவானி நகராட்சி அலுவலகம், சலங்கைபாளையம் இரட்டை வாய்க்காலி... மேலும் பார்க்க