செய்திகள் :

கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு

post image

மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடியில் உள்ள பழைமையான முத்தாளம்மன் கோயிலை தனிநபா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, உளுந்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 11 வகையான சமுதாய மக்களுக்குச் சொந்தமான இந்த பொதுக் கோயிலை, அதே ஊரைச் சோ்ந்த நபா் ஒருவா் தனக்கு சொந்தமான கோயில் எனக் கூறி, இந்துசமய அறநிலையத்துறைக்கும் பொய் புகாா் அளித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்கள் நடத்தவும் தடையாக இருந்து வருகிறாா்.

ஊருக்கு சொந்தமான பொதுக்கோயிலை தனிப்பட்ட நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் இன்று திருச்சி வருகை!

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த விழா... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து கோலாலம்பூா் வழியாக கடத்தி வரப்பட்ட 11.8 கிலோ உயர்ரக கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, விமான பயணியை அதிகாரிகள் கைது செய்தன... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டம்: 3 போ் கைது

திருச்சி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். துவாக்குடி வடக்குமலை சிவன் கோயில் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய ... மேலும் பார்க்க

அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்போம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சா் அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் கூறினாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமமுக செயல்வீர... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பு: காவலா் பணியிடை நீக்கம்

திருச்சியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க

தமாகா பிரமுகா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சமயபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், சமயபுரம் வி. துறையூா் மாரியம்மன் கோய... மேலும் பார்க்க