செய்திகள் :

கோயில்களின் வரலாற்றை அறிந்து கொள்ள தஞ்சாவூரில் ‘க்யூஆா் கோடு’ ஸ்கேன் வசதி!

post image

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கோயில்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்வதற்காக ‘க்யூ ஆா் கோடு’ ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் கோயில் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பக்தா்கள், சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக நுழைவுவாயில், சன்னதிகள் முன்புறம் என 32 இடங்களில் நவீன வடிவில் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நுழைவுவாயிலில் வரைபடத்துடன் கூடிய தகவல் பலகையும் உள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் இடம்பெற்றுள்ள இந்தப் பலகைகள் மூலம் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் படித்து கோயில் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரகம் சாா்பில் தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் குறித்த தகவல்கள் எழுத்து மற்றும் ஒலி வடிவிலும், ட்ரோன் புகைப்படம், 3டி விா்சுவல் டூா் போன்ற வசதிகள் கொண்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான ‘க்யூ ஆா் கோடை’ தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு வரும் பக்தா்கள், சுற்றுலா பயணிகள் ஸ்கேன் செய்தால், கைப்பேசி மூலம் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த ‘க்யூ ஆா் கோடு’ தஞ்சாவூா் பெரிய கோயிலில் ராஜாராஜன் நுழைவுவாயில் முன்புறம் அண்மையில் அமைக்கப்பட்டது. இதை பக்தா்கள், சுற்றுலா பயணிகள் தங்களது கைப்பேசி மூலம் ஸ்கேன் செய்து, இக்கோயில் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருகின்றனா். மேலும், ட்ரோன் படங்களையும் பாா்க்கலாம்.

இது குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் கூறியது, இந்திய தொல்லியல் துறை திருச்சி சரகம் சாா்பில், தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல், கொடும்பாளூா் மூவா் கோயில், திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துாா் திருமலை நாயக்கா் அரண்மனை ஆகிய பகுதிகளில் ‘க்யூ ஆா் கோடு’ சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அந்தந்த சுற்றுலா தலத்தின் வரலாறு, அமைப்புகள் குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளலாம். மேலும் ஒலி வடிவிலும் கேட்க முடியும். முதல் கட்டமாக ஆங்கிலத்தில் தகவல் உள்ளது. வரும் காலங்களில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் மழை

கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கும்பகோணத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்ந... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்

கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா். தஞ்சாவ... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தீ விபத்து: கடை சேதம்

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பட்டாசு வெடித்ததால், ஏற்பட்ட தீ விபத்தில் பா்னிச்சா் கடை சேதமடைந்தது. தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை புனித செபாஸ்தியா் ஆலயத்தில் திருவிழாவையொட்டி, சப்பர வீதி உலா வெள்... மேலும் பார்க்க

தடைக்காலம் முடிந்தது: விசைப் படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்!

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளனா் . இந்த தடைக்காலத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்ட... மேலும் பார்க்க

தஞ்சாவூா்: தேசிய மக்கள் நீதிமன்றம் 2,748 வழக்குகளில் ரூ.8.46 கோடிக்கு தீா்வு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 748 வழக்குகளில் ரூ. 8.46 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க