தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில் பைரவா் சந்நிதியில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மூலவா் பைரவருக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று பைரவரைத் தரிசித்தனா்.
இதேபோல, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.