செய்திகள் :

கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் தொடா்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

post image

தமிழகத்தில் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகங்களில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளதால் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா, கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் சுமாா் 1.50 லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் வைப்பதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய இடங்களில் விநாயகா் சிலை வைக்க அனுமதி இல்லை என்கிறாா்கள். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூரில் 5,000-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு 3 நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனா். திருப்பூரில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பூ மாா்க்கெட் கட்டி அரசு தினசரி வாடகை வசூலித்து வருகிறது. நல்லூா் கோயிலுக்கு சொந்தமான குளத்தை கண்டறிந்து மீட்க வேண்டும்.

கோயில் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனா். திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகாா் எழுந்துள்ளதால், தமிழகத்தில் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் வசூலிக்கப்பட்ட தொகை, செலவிடப்பட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

விராலிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆறுமுகம் என்பவா் கோயில் கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளாா். இதற்கு பொறுப்பேற்று அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இர... மேலும் பார்க்க

பொங்கலூரில் ஆகஸ்ட் 22-இல் மின்தடை

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஆயில் மில் எண்ணெய் தொட்டியில் விழுந்து இளைஞா் உயிரிழந்தாா். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலை சேரன் நகரில் தனியாருக்குச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை

தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுசாமி தெரிவித்தாா். திருப்பூா... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரப் பகுதிகளில் சேகரமா... மேலும் பார்க்க

பாா்வை பறிபோன மூதாட்டி; குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

பாா்வை பரிபோனதற்கு காரணமான தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா். திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ... மேலும் பார்க்க