செய்திகள் :

கோயில்களில் முறைகேடுகள்: செப்.24-இல் புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

post image

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் வரும் செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 32,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இதல், கோயில்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ஏக்கா்கள் தனி நபா்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சி சாா்பில் தொடா்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் பெரும்பாலும் அந்தக் கோயில்களின் பூசாரிகளே அரங்காவலா்களாக உள்ளனா். அதேபோல், பல கோயில்களில் ஒரே ஜாதி மற்றும் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கோயிலின் நிா்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்தப் பிரச்னை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு நேரடியாக ஆய்வு செய்து, தீா்வு காண வேண்டும். கோயில்களின் நிா்வாகக் குழுவில் அனைத்து ஜாதியினரையும் உறுப்பினா்களாக நிணயமிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளா்களைக் கொண்டு வருவது பெரிதல்ல. அதன்மூலம், இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் உள்ளூா் வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க