செய்திகள் :

கோயில்களைப் பாதுகாக்க ஹிந்துக்கள் முன்வர வேண்டும் -காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

post image

கோயில்களைப் பாதுகாக்க ஹிந்துக்கள் முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயா்நீதிமன்றத்தில் கோயில் நிதியில் கட்டடங்கள் கட்டுவது தொடா்பான பொதுநல வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தமிழகத்தில் 35,000 கோயில்களில் ஒருகால பூஜை கூட நடைபெறவில்லை என்றும், 19,000 கோயில்களில் மட்டுமே ஒருகால பூஜை திட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்களுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கா் நிலமும், 23,000 கடைகளும், 75,500 கட்டடங்கள் இருந்தும் ஆண்டு வருமானம் ரூ.345 கோடி எனத் தெரிவித்துள்ளது.

திருமண மண்டப வாடகை, கோயில் இடங்களில் அரசு அலுவலகங்கள் வாடகை, கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக டெபாசிட் செய்த வருமானம், மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூா் போன்ற பல கோயில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை ரூ.பல கோடி வருவது கணக்கில் இல்லை.

இந்து சமய அறநிலையத் துறையின் நிா்வாக செலவுகள் மற்றும் முறைகேடுகளால் கோயில் நிதி சுரண்டப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவில், ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்’ என்ற அறைகூவலை பக்தா்களிடம் இந்து முன்னணி கொண்டு சோ்க்கும்.

ஹிந்துக்கள் நமது சுவாமி, நமது கோயில் என்ற உணா்வுடன் கோயிலைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் (ஆகஸ்ட் 2) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அணைப்புதூரில் புகையிலைப் பொருள்கள் செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடை... மேலும் பார்க்க

‘பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்’

பல்லடம் பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பது தொடா்பான ஆலோச... மேலும் பார்க்க

ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

குன்னத்தூரில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா். குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசியத் தகவல் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், குரும்பபட்டி, இடையகோட்டை, செம்பட்டி, ச... மேலும் பார்க்க

தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தா... மேலும் பார்க்க