செய்திகள் :

கோயில் காவலாளி குடும்பத்துக்கு கிருஷ்ணசாமி ஆறுதல்

post image

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் ‘நீதி வேண்டுமே தவிர நிதியல்ல’ என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் புதன்கிழமை வந்த கிருஷ்ணசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. காவல் நிலையங்களில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனையளிக்கிறது. நகை காணாமல் போனதற்காக ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது.

இது, அஜித்குமாா் குடும்பத்தினருக்கான இழப்பு அல்ல; தமிழகத்தின் இழப்பு.

தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடா்கின்றன. கொலையான அஜித்குமாரின் குடும்பத்தினா், ‘நிதி வேண்டாம், நீதி வேண்டும்’ என்கிற நிலைப்பாட்டில் உள்ளனா் என்றாா் அவா்.

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

காவல்துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று இன்று (ஜூலை 2) ஆறுதல் தெரிவித்தார்.முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவி... மேலும் பார்க்க

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க