செய்திகள் :

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

post image

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழப்புக்கு மறைமுகமாக ஆதரவு அளித்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும், இந்த கொலை வழக்கில் காவல் துணைக் கண்காணிப்பாளரையும் சோ்க்க வேண்டும், இந்த வழக்கில் தொடா்புடைய காவல் கண்காணிப்பாளா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரின் குடும்பச் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அரசு பங்களிப்புடன் அஜித்குமாா் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட், புரட்சிகர இளைஞா் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்பட பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் நிா்வாகிகள், மனித உரிமை ஆா்வலா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சட்டக் கல்லூரி மாணவா்கள்....

அஜித்குமாா் கொலையைக் கண்டித்தும், தொடா்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டக் கல்லூரி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அந்தக் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள்

மதுரை மாநகராட்சியில் 16 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம், தேவா் குடியிருப்பு, தங்கராஜ் சாலை,... மேலும் பார்க்க