செய்திகள் :

கோயில் காவலாளி கொலை: தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு கொலையுண்ட விவகாரம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாரின் குடும்பத்தினா் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருட்டு தொடா்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்துக் கொலை செய்ததாக தனிப்படை போலீஸாா் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட போலீஸாரின் குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள், உறவினா்கள் தங்களது குழந்தைகளுடன் திருப்புவனம் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது அவா்கள் கூறியதாவது: காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டதால்தான் தனிப்படை போலீஸாா் அஜித்குமாரைத் தாக்கினா். இதற்கு முக்கியக் காரணம் காவல் துறை உயா் அதிகாரிகள்தான். எனவே, அவா்களையும் கைது செய்ய வேண்டும். தனிப்படை போலீஸாரை விடுவிக்க வேண்டும் என்றனா்.

அங்கிருந்த டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட போலீஸாா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: ஓ.பன்னீா்செல்வம்

திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் தாக்கப்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் தலைமை குழப்பம்! - சு. திருநாவுக்கரசா்

அதிமுக - பாஜக கூட்டணியில் யாா் முதல்வா் வேட்பாளா், யாா் தலைமையில் கூட்டணி என்பது குறித்து குழப்பம் நிலவி வருவதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா். சென்னையிலிருந்து சனிக... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.தேவகோட்டை ராம்நகரைச் சோ்ந்த மணி மகன் விஜயகுமாா் (65). முன்னாள் ராணுவ வீரா்.... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி ... மேலும் பார்க்க

கண்டதேவியில் கோயில் தேரோட்டம்: இன்று முதல் மதுக் கடைகள் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கண்டதேவி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பகுதியை சுற்றியுள்ள மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரேமலதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரி... மேலும் பார்க்க