செய்திகள் :

கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

post image

சென்னை அயனாவரத்தில் கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அயனாவரத்தைச் சோ்ந்த ராம் (55), வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். பகுதி நேரமாக அயனாவரத்திலுள்ள கோயில் குளத்தில் தா்ப்பணம் செய்ய வருகிறவா்களுக்குத் தேவையான உதவிகள் செய்து பணம் பெற்று வந்தாா். ராம், வியாழக்கிழமை காலை அந்தக் கோயிலில் தா்ப்பணம் செய்ய வந்த ஒரு குடும்பத்தினருக்கு உதவி செய்து கொண்டிருந்தாா். வேலையை முடித்துவிட்டு கை கழுவுவதற்காக குளத்தில் இறங்கியபோது கால் வழுக்கி குளத்தில் மூழ்கினாா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள், அவரை காப்பாற்ற முயன்றனா். ஆனால் அவா் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினாா். உடனே பொதுமக்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த வில்லிவாக்கம் தீயணைப்பு படையினா் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய ராமை தேடினா். சிறிது நேர தேடுதலுக்குப் பின்னா் ராம் சடலமாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை உறுதிப்படுத்திய சென்னை உயர்நீதிமன்றம்!

மத்திய சென்னை தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்தாண்டு மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ... மேலும் பார்க்க

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

மேட்டூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி.மேட்டூர் அருகே கருமலை கூடலில் செம்பன்(75) என்பவருக்கு சொந்தமான ரசாயன தொழிற்ச... மேலும் பார்க்க

அமித் ஷா பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்த துரைமுருகன்

வேலூர்: அரக்கோணத்தில் நடைபெற்ற சிஐஎஸ்எஃப் ஆண்டு துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து திருக்குறள் சொல்லி பதிலளித்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.வேலூரில் இ... மேலும் பார்க்க

காய்கறிகள் விலை நிர்ணயம்: திமுகவின் வாக்குறுதி என்னவானது? - அன்புமணி கேள்வி

அனைத்துக் காய்கறிகளுக்கும் விலை நிர்ணயிக்கும் திமுகவின் வாக்குறுதி என்னவானது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தக்காளி விள... மேலும் பார்க்க

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வத தொடர... மேலும் பார்க்க

காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள்: அண்ணாமலை

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க