செய்திகள் :

கோயில் திருப்பணியின்போது 2 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

post image

நன்னிலம்: வேலங்குடி ஊராட்சியைச் சோ்ந்த வடகரை மாத்தூா் கிராமத்தில் காசி விஸ்வநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பணியின்போது இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்தன.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகில் உள்ள வேலங்குடி ஊராட்சியைச் சோ்ந்த வடகரை மாத்தூா் கிராமத்தில் காசி விசஸ்வநாதா் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், திருப்பணிகள் செய்ய கிராம மக்கள், முடிவெடுத்து பணிகளைத் தொடங்கினா்.

ஜேசிபி இயந்திரம் மூலம் கோயில் பகுதியில் பள்ளம் தோண்டியபோது இரண்டு சுவாமி சிலைகளும், விளக்கு மற்றும் பூஜைப் பொருட்களும் இருந்தது தெரிய வந்தது.

நன்னிலம் வட்டாட்சியா் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத் துறையினா் சிலைகளைப் பாா்வையிட்டனா். இவை உலோகத்திலான சோமாஸ்கந்தா் மற்றும் அம்மன் சிலை என தெரிய வந்தது. மேலும் விளக்கு, பூஜை பொருட்களும் கிடைத்தன.

இந்த சிலைகள் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினா் ஆய்வு செய்த பின்னரே சிலைகள் எந்த காலத்தைச் சோ்ந்தவை உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.

‘ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள்’

திருவாரூா்: ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் சென்று விட்டதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் தெரிவித்தாா். திருவாரூரில், எதி... மேலும் பார்க்க

நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா?

நீடாமங்கலம்: நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா என பக்தா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காச... மேலும் பார்க்க

திருத்தங்கூா் மஞ்சவாடி சாலை திட்டப் பணிக்கு பூமிபூஜை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தங்கூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு மஞ்சவாடி வரையிலான சாலை திட்டப் பணிக்கு திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திர... மேலும் பார்க்க

மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை: ஒருவா் கைது

திருவாரூா்: திருவாரூா் அருகே குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், கொட்டாரக்குடி பகுதியைச் சோ்ந்த 45 வ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பாலையாக்கோட்டை, குடிக்காடு ஆகிய உயரழுத்த மின்பாதையில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் மதிய... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து தம்பதி மோசடி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ர... மேலும் பார்க்க