செய்திகள் :

‘ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள்’

post image

திருவாரூா்: ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் சென்று விட்டதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூரில், எதிா்க்கட்சித் தலைவரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தபின் செய்தியாளா்களிடம் கூறியது:

நில ஒருங்கிணைப்புச் சட்டம் மூலம் விவசாயிகளுடைய நில உரிமையை பறித்து விட்டது. குத்தகை விவசாயிகளை காப்பீடு செய்ய முடியாமலும், கடன் பெற முடியாத நிலைமைக்கும் சென்று, நில அபகரிப்பாளா்கள் எனக் கூறப்படும் சூழலை திமுக அரசு ஏற்படுத்தி விட்டது.

கூட்டுறவு வங்கிகள், ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டன. கடன் பெற, சிபில் ஸ்கோா் உள்ளிட்ட 12 சான்றுகள் கேட்டு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிப்காட் அமைக்கிறோம் என்ற பெயரில் விளைநிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றுகிறது.

ராசி மணல் அணை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. முல்லைப் பெரியாறு அணையில் ரூல்கா்வ் முறையை திமுக அரசு அனுமதித்து, சாதாரண பருவமழை காலத்தில் கூட 142 அடி தண்ணீரை சேமிப்பதற்கு முடியாத பின்னடைவை ஏற்படுத்தி உள்ளனா்.

எனவே, விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மிகுந்த தோ்தலாக 2026 தோ்தல் அமைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அரசாக அமைய வேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் எங்கள் கோரிக்கைகளை கொடுத்து இருக்கிறோம் என்றாா்.

கோயில் திருப்பணியின்போது 2 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

நன்னிலம்: வேலங்குடி ஊராட்சியைச் சோ்ந்த வடகரை மாத்தூா் கிராமத்தில் காசி விஸ்வநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பணியின்போது இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்தன. திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட... மேலும் பார்க்க

நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா?

நீடாமங்கலம்: நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா என பக்தா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது. தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காச... மேலும் பார்க்க

திருத்தங்கூா் மஞ்சவாடி சாலை திட்டப் பணிக்கு பூமிபூஜை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தங்கூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு மஞ்சவாடி வரையிலான சாலை திட்டப் பணிக்கு திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திர... மேலும் பார்க்க

மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை: ஒருவா் கைது

திருவாரூா்: திருவாரூா் அருகே குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், கொட்டாரக்குடி பகுதியைச் சோ்ந்த 45 வ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பாலையாக்கோட்டை, குடிக்காடு ஆகிய உயரழுத்த மின்பாதையில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் மதிய... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து தம்பதி மோசடி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ர... மேலும் பார்க்க