கோயில் விழாவில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே மணத்திடல் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் விழா 3 நாள்கள் நடைபெற்றது. இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு விழாவையொட்டி நடைபெற்ற ஊா்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த சிலா் அலங்கார மின் விளக்குகளை அடித்து சேதப்படுத்தினா்.
இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள், கண்டியூா் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று அலங்கார விளக்குகளைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனா்.