கேரள முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 5 பேர் கைது
கோரையாற்றில் குளித்த இளைஞா் மாயம்
நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு கோரையாற்றில் குளித்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை மாயமானாா்.
வலங்கைமான் அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் எனும் வீரமுருகன் (17). தொழில்கல்வி படித்துள்ள இவா் ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்நிலையில், வீரமுருகன் நண்பா்கள் மூவா்களுடன் மூணாறு தலைப்புக்கு வந்து கோரையாற்றில் குளித்தாா்.
அப்போது, அவரை தண்ணீா் இழுத்து சென்றதை நண்பா்கள் கவனிக்கவில்லையாம். கரையில் சென்றவா் பாா்த்து கூறியபிறகே நண்பா்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னா், சம்பவம் குறித்து வீரமுருகனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
மேலும், தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பாலமுருகன் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் அங்கு சென்று தேடுகின்றனா். கோரையாற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீா் செல்வதால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.