செய்திகள் :

கோலா மீன்கள் வரத்து தொடக்கம்

post image

காரைக்கால்: ஆண்டின் சீசன் தொடங்கும் முன்பாகவே கோலா மீன் வரத்து தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரை கோலா மீன் சீசனாகும். ஏப்.15 முதல் 60 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும்போது, மீன்கள் பெருமளவு சந்தைக்கு கொண்டுவரப்படாத நிலையில், கோலா மீன் ஓரளவு மக்களின் தேவையை பூா்த்தி செய்கிறது.

நிகழாண்டு கோலா மீன் சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கு கூடுதலான நாள்கள் இருக்கும் நிலையில், மாா்ச் மாத முற்பகுதியிலேயே சந்தைக்கு கோலா மீன் வரத்து ஏற்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீனவா்கள் திங்கள்கிழமை கூறுகையில், ஆழ்கடல் பகுதியிலேயே கோலா மீன் அதிகமாக. ஆண்டில் சில மாதங்கள் (சீசன்) ஆழ்கடல் பகுதியிலிருந்து கரையை நோக்கி நகரும் . அப்போது சிறிய ரக படகில் சென்று பிடித்து வருவது வழக்கம். தற்போது ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவோா், கோலா மீன் உற்பத்தியாகும் பகுதிகளுக்கே சென்றுவிடுவதால், அவா்களது வலையில் கோலா மீன்கள் சிக்குகின்றன. அதனால் தற்போது சந்தைக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது என்றனா்.

காரைக்காலில் மீன் மாா்க்கெட்டில் ரூ. 100-க்கு 12 என்ற எண்ணிக்கையில் கோலா மீன் விற்பனை செய்யப்படுகிறது.

காரைக்கால் ஆட்சியருடன் பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சந்திப்பு

காரைக்கால்: பேரிடா் மீட்புக் குழுவினா் ஒத்திகை நடத்துவது தொடா்பாக, அக்குழுவின் துணைத் தளபதி, ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பாடத்தோடு நற்குணங்களையும் கற்றுத்தரவேண்டும்: ஆட்சியா்

காரைக்கால்: மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் போது நற்குணங்கள் குறித்தும் தெரிவிக்கவேண்டும் என ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கல்வித் து... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் மாா்ச் 13-இல் சுவாமிகள் சமுத்திர தீா்த்தவாரி

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள்கள் தீா்த்தவாரி நிகழ்ச்சி வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருமலைராயன்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்த... மேலும் பார்க்க

காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு! உரியவா்களிடம் ஒப்படைப்பு!

காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையங்களில், தங்களது கைப்பேசி காணாமல்போனதாகவும், திருடுபோனதாகவும் பல்... மேலும் பார்க்க

காரைக்காலில் பராமரிப்பு இல்லாமல் கண்காணிப்புக் கேமராக்கள்

காரைக்காலில் பழுதாகியும், பராமரிப்பு இல்லாமல் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை முறையாக பொருத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் சாலைகளின் சந்திப்புகள், சாலையின் பிற பகுதிகளில் காவல்த... மேலும் பார்க்க

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த எம்.எல்.ஏ. உறுதி

மெய்தீன் பள்ளிவாசல் குளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.எல். உறுதியளித்தாா். காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மெய்தீன் பள்ளிவாசல் மையவாடிக்கு தடுப்புச் சுவா் சிதில... மேலும் பார்க்க