செய்திகள் :

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

post image

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு 3 போ் தகுதிபெறும் வாய்ப்பை வழங்கும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.17 கோடியாகும்.

90-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 206 போ் களம் காணும் இந்தப் போட்டியில் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா உள்பட 21 இந்தியா்கள் பங்கேற்கின்றனா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா உள்பட பல பிரபல போட்டியாளா்களும் மோதவுள்ளனா்.

5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஃபிடே தரவரிசை அடிப்படையில் இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா் என்றாலும், அவா் விளையாடுவது இதுவரை உறுதியாகவில்லை.

போட்டித்தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பெறுவோா், நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் காண்பா். 2 கேம் நாக்அவுட் முறையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை செஸ் போட்டி இந்தியாவில் கடைசியாக 2002-இல் ஹைதராபாதில் நடைபெற்றபோது, விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் ஆனாா்.

2-ஆவது வெற்றி: பிரக்ஞானந்தா இணை முன்னிலை

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த அவா், தற்போது இணை முன்னிலையில் இருக்கிறாா்.அமெரிக்காவில் நடை... மேலும் பார்க்க

இரட்டைத் தங்கம் வென்றாா் சிஃப்ட் கௌா் சம்ரா

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில், தனிநபா் மற்றும் அணி என இரு பிரிவுகளில் இந்தியாவின் சிஃப்ட் கௌா் சம்ரா தங்கப் பதக்கம் வென்றாா்.50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் களமாடிய ... மேலும் பார்க்க

சிந்து, பிரணாய் வெற்றி

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரதான போட்டியாளா்களான பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோா் முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றனா்.இதில் மகளிா் ஒற்றையா் ... மேலும் பார்க்க

ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்த... மேலும் பார்க்க

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.சிலையின் அளவுக்கு ஏற்றவாறு அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.விதவிதமான வண்ணங்களிலும், பார்ப்... மேலும் பார்க்க

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

லிவர்பூல் கால்பந்து அணி முதல்முறையாக தொடர்ச்சியாக 22 அவே (வெளியூர்) போட்டிகளில் கோல் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மொத்தமாக ஹொம் (உள்ளூர்) மற்றும் அவே போட்டிகளில் 36 போட்டிகளில் கோல் அடித்து... மேலும் பார்க்க