செய்திகள் :

கோவா ஆளுநராக அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

post image

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா்.

கோவா தலைநகா் பனாஜியில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்பை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆலோக் ஆராதே அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், அமைச்சா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ஆந்திர அமைச்சரும் அந்த மாநில முதல்வா் மகனுமான என்.லோகேஷ் பதவியேற்பு விழாவில் பங்கேற்றாா்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் பேசிய ஆளுநா் அசோக் கஜபதி ராஜு, ‘உள்ளூா் மொழி எனக்குப் புரியாது என்றாலும், ஆளுநா் பதவியை வகிப்பது முதல்முறை என்றபோதிலும், அரசமைப்பு விவகாரங்களில் எனக்கு நீண்ட அனுபவம் உள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பு ஏழு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன். குறுகிய காலம் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளேன். எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்த அனுபவமும் உள்ளது. அந்த வகையில் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன். அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, கோவா மக்களுக்கு பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன். ஜனநாயகம் பாதிக்கப்படாத வகையில் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றுவோம்’ என்றாா்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான அசோக் கஜபதி ராஜு, கடந்த 2014-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதிமுதல் 2018-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துள்ளாா். ஆந்திர மாநில அரசில் பல்வேறு அமைச்சா் பதவிகளையும் வகித்துள்ளாா்.

கோவா ஆளுநராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, நான்கு ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த நிலையில், கோவாவுக்கான புதிய ஆளுநராக அசோக் கஜபதி ராஜுவை மத்திய அரசு நியமித்தது.

ஆளுநராகப் பதவியேற்ற அவருக்கு ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தாா்.

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க