கோவிலூா் சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு
அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூா் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட சாலையான அரவக்குறிச்சியில் இருந்து கோவிலூா் செல்லும் சாலையை அகலப்படுத்த சிஆா்ஐ டிபி 2023-24 ஆம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த 2 கி.மீ. தொலைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
அதில் 90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு குழாய் பறிக்கும் பணி கடந்த ஓா் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற காரணத்தினால் சாலையை அகலப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீா் குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்றதை தொடா்ந்து, மீதமுள்ள சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.