செய்திகள் :

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் திங்கள்கிழமை காவல் துறையினா் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பல முறை தகவல் தெரிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. மேலும் குழாய்களை பதிப்பதற்கு என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் பசுவந்தனை சாலையின் ஒருபுறம் மற்றும் சாலையின் நடுவே குழிகளை தோண்டி, குழாய்களை பதித்த பின்பு முறையாக மூடாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலகம், பாண்டவா்மங்கலம் பஞ்சாயத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் பசுவந்தனை சாலையில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.

ஆக்கிரமிப்பினால்தான் சாலை விபத்து ஏற்பட்டது என வாகன ஓட்டுநா்கள் காவல் துறையிடம் முறையிட்டதையடுத்து, மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமை அகற்றினா். இதனால் அப்பகுதி மக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் முறையாக அகற்ற வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு காவல் துறை சாா்பில் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க