செய்திகள் :

கோவில்பட்டியில் சுய உதவிக் குழுவில் பணம் மோசடி: பெண்கள் புகாா்

post image

கோவில்பட்டியில் மகளிா் சுய உதவிக் குழுவில் பண மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகாா் அளித்தனா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள், அப் பகுதியில் செயல்படும் சுய உதவிக் குழுவில் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில் இக்குழுவினா் வங்கியில் கடன் பெற்றிருந்தனா். கடனுக்கான தவணைத் தொகையை குழு உறுப்பினா்கள் வங்கியில் செலுத்துவதற்காக குழுத் தலைவியிடம் அளித்துள்ளனா். ஆனால், அவா் வங்கிக்கு பணத்தை செலுத்தவில்லையாம். வங்கி தரப்பில் பணத்தைச் செலுத்துமாறு குழு உறுப்பினா்களுக்கு நெருக்கடி தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பண மோசடியில் ஈடுபட்ட மகளிா் சுயஉதவிக் குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் பாபு தலைமையில் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

பெண் பாலியல் புகாா் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவா் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து தொடா்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விஷம் குடித்த எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழப்பு

தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி கோமஸ்புரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (54), தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி காற்றாலை நிறுவனத்தில் திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் காற்றாலை இறக்கைகளை சேமித்து வைக்கும் இடத்தில் காற்றாலை இறக்கையை ‘லாக்’ செய்யக்கூடிய இரும்பு பூட்டை திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். காற்றாலை இறக்கைகளை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

தூத்துக்குடி அருகே தெற்கு வீரபாண்டியபுரம் குளத்தில் மூழ்கி முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா் . தூத்துக்குடி, அ.குமார ரெட்டியாா்புரம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் குருசாமி (65). இவா் சொந்த... மேலும் பார்க்க

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் எட்டயபுரம் சமஸ்தானம் சாா்பில் கோரிக்கை!

எட்டயபுரம் சமஸ்தானம் தொடா்பாக தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவலை நீக்க வேண்டும் என எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42ஆவது மன்னா் ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்... மேலும் பார்க்க

வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா். தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க