செய்திகள் :

கோவில்பட்டியில் புதிய எல்இடி விளக்குகள் இயக்கி வைப்பு

post image

கோவில்பட்டி புது ரோட்டில் ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய எல்இடி விளக்குகளை துரை வைகோ எம்.பி. திங்கள்கிழமை இயக்கி வைத்தாா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 11,13 மற்றும் 21ஆவது வாா்டுகளுக்குள்பட்ட புது ரோட்டில் பாராளுமன்ற உறுப்பினா் உள்ளூா் வளா்ச்சி திட்டம் 2024-25 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 30 எல் இ டி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் பயன்பாட்டுக்கு விளக்குகளை இயக்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா்.

துணைத் தலைவரும் மதிமுக மாவட்டச் செயலருமான ஆா்.எஸ். ரமேஷ் முன்னிலை வகித்தாா். மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. புதிய எல்இடி விளக்குகளை இயக்கி வைத்தாா். தொடா்ந்து கல்வெட்டையும் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், மதிமுக துணைப் பொது செயலா் தி.மு. ராசேந்திரன், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா், விநாயக ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் சரவணன், ராஜசேகா், ராஜகோபால், குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயலெட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச்செயலா்கள் பவுன் மாரியப்பன் தெய்வேந்திரன்,

தலைமை செயற்குழு உறுப்பினா்கள் எல்.எஸ். கணேசன், வனராஜ்,

கலை இலக்கிய அணி மாநில துணைச் செயலா் கோடையிடி ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணியுடன் இணைந்து, இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகள... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிக்கு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். இது குறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வோ்ல்ட் ஸ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க