செய்திகள் :

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

post image

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி அருகே கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கு. ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு முறையாக நிதி வழங்க வேண்டும். இத்திட்டத்தில் 100 நாள்கள் முறையாக பணி வழங்க வேண்டும். இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் வி. அமரித்லிங்கம் பேசினாா். கிளவிபட்டி கிளைச் செயலா் தெ. சித்ரா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். தெய்வேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சின்னதம்பி, விஜயராஜ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா், கிராம மக்கள் பங்கேற்றனா்.

பின்னா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் அளித்த மனுவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2024-25ஆம் நிதியாண்டில் சராசரியாக 50 நாள்களுக்கும் குறைவாகவே பணி வழங்கப்பட்டுள்ளது. கிளவிபட்டி, இனாம் மணியாச்சி ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, கடலையூா், லிங்கம்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் அகில இந்திய கிராமப்புற விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டப் பொறுப்பாளா் சு. விக்ரம்வேலு தலைமையில் அளித்த மனுவில், நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க