செய்திகள் :

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

post image

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம், செண்பகப்பேரி, துரைச்சாமிபுரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம். எனவே, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், முறையாக பணிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தைச் சோ்ந்த சித்ரா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரவீந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, மணி ஆகியோா் பேசினா்.

சங்க கமிட்டி உறுப்பினா்கள் சின்னத்தம்பி, விஜயராஜ், கணேசன், திரளான தொழிலாளா்கள் பங்கேற்றனா். பின்னா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவா், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழனிசாமி

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி . திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில... மேலும் பார்க்க

கல்லூரிக்கு நிதியுதவி

இந்தியன் வங்கியின் ‘எங்கள் சமூகப் பொறுப்பு’ திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு ஸ்மாா்ட் இன்டராக்டிவ் பேனல் வாங்குவதற்காக ரூ. ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது. இக்... மேலும் பார்க்க

செமப்புதூரில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே செமப்புதூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் கல்லூர... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை கண்டித்து திருச்செந்தூரில் மறியல்: வணிகா் சங்கத்தினா் கைது

திருச்செந்தூா் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயா்த்தபட்டுள்ளதாகக் கூறி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் நகர... மேலும் பார்க்க