செய்திகள் :

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையைக் கண்டித்து, பாண்டியனாா் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

பாண்டியனாா் மக்கள் இயக்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் சீனிராஜ் தலைமை வகித்தாா். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன் முன்னிலை வகித்தாா். பின்னா் போராட்டக் குழுவினா் கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்தனா்.

போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ரவிக்குமாா், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ராஜசேகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலா் துரைராஜ், மக்கள் நீதி மய்யத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த செண்பகராஜ், பாண்டியனாா் மக்கள் இயக்கம் மாவட்டச் செயலா் விஜயகணேஷ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க