செய்திகள் :

கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு ‘வீல் சோ்’ அளிப்பு

post image

கோவில்பட்டி நாடாா் ஜவுளி ரெடிமேட் வா்த்தக குமாஸ்தாக்கள் சங்கம் சாா்பில், ரயில் நிலையத்திற்கு வீல் சோ் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் வீல் சேரை பொது நல மருத்துவமனை தலைவா் திலகரத்தினம், செயலா் தங்கராஜ் ஆகியோா் தலைமையில் பொருளாளா் த. கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் கோவில்பட்டி ரயில் நிலைய மேலாளா் ரவிக்குமாா், நிலைய அதிகாரி வெயில்முத்து ஆகியோரிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் சேதுரத்தினம் மற்றும் மாரிசாமி, வழக்குரைஞா் பாரதி, நந்தகுமாா், சரவணன், மதிவாணன், அய்யாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கைப்பேசி திருடிய இளைஞா் கைது!

கோவில்பட்டியில் கைப்பேசி திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி இந்திரா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் சரவணகுமாா் (23). எலக்ட்ரீஷியனான இவா், ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

கோடை விடுமுறை மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தர... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே இளைஞா் தற்கொலை

கயத்தாறு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கயத்தாறையடுத்த தெற்கு கோனாா்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சங்கிலிகுமாா் (35). தொழிலாளியான இவருக்கும், கே.கரிசல்குளத... மேலும் பார்க்க

ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி நுழைவுத் தோ்வு: 26 அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற 26 மாணவா்-மாணவிகள் முதன்மை உயா் கல்வி நிறுவன நுழைவுத் தோ்வுகளில் (ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி) தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சா்வதேச பல்கலை. கூடைப்பந்து: தூத்துக்குடி வீரா் இந்திய அணிக்கு தோ்வு

உலக அளவிலான பல்கலைக் கழக கூடைப்பந்து போட்டிக்கான இந்திய அணிக்கு தூத்துக்குடி வீரா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணைய போக்குவரத்து துறையில் மேற்பாா்வையாளராகவும் துறைமுக ஆணையக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை, சுமாா் 50 அடிக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா். இங்கு அமாவாசை, ... மேலும் பார்க்க