செய்திகள் :

கோவைக்கு 400 கிலோ புகையிலைப் பொருள் கடத்த முயன்றவா் கைது

post image

கா்நாடகத்திலிருந்து ஒசூா் வழியாக கோவைக்கு 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஒசூரில் ராயக்கோட்டை சாலைப் பிரிவில் நகர போலீஸாா் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஈச்சா் லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் லாரியில் குட்கா மூட்டைகளைப் பதுக்கி வைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை ஓட்டிவந்த கா்நாடக மாநிலம், தும்கூரைச் சோ்ந்த நரசிம்மராஜுவை (41) பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், கா்நாடகத்திலிருந்து ஒசூா் வழியாக கோவைக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான 400 கிலோ குட்கா மூட்டைகளைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து நரசிம்மராஜுவை கைது செய்த போலீஸாா் லாரியுடன் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க