செய்திகள் :

கோவை அருகே சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!

post image

கோவை அருகே சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் உதயசந்திரன், இளங்கோவன், பெருமாள், உதகை அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியை கனகாம்பாள் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வு குறித்து கோவையைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் தமிழ்மறவான் ரமேஷ் அண்மையில் கூறியதாவது:

கோவை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 5 நடுகற்களும் சுமாா் 700 ஆண்டுகள் பழைமையானதாகும். ஒத்தக்கால்மண்டபம் மீனாட்சிபுரத்தை அடுத்த வடபுதூா் கிராமத்தில் பண்டக்கல் என்ற பெயரில் ஒரு நடுகல் கண்டெடுக்கப்பட்டது. பழங்காலத்தில் விவசாயப் பொருள்களை வன விலங்குகளிடம் இருந்து காப்பாற்றியவா்களுக்கு வைக்கப்பட்ட நடுகல் என்பதால் பண்டக்கல் என்று பெயா் பெற்றிருக்கலாம்.

பயிா்களை உண்பதற்காக யானை வந்தபோது, காவல் காத்த வீரனுக்கும், யானைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வீரன் உயிரிழந்துள்ளாா். இறந்த வீரனுக்காக அமைக்கப்பட்ட நடுகல்லாக இந்தப் பண்டக்கல் உள்ளது.

சதிக்கல்: அதேபோல, வடசித்தூரில் சதிக்கல் என்ற நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சதிக்கல்லில் கணவன் நடுவிலும், இரண்டு மனைவிகள் இருபுறமும் உள்ளனா். இரு மனைவியரின் அருகே மதுவை ஊற்றிவைக்கும் பாத்திரம் உள்ளது. கணவன் இறந்துவிட்டால் அவனது மனைவியா் சிதையில் விழுந்து உயிா் துறப்பா். உயிா் துறக்க முடியாதவா்களை மதுவை கொடுத்து மது மயக்கத்தில் இருக்கும்போது சிதையில் தூக்கிப்போட்டு விடுவாா்கள். அதற்காகத்தான் மதுவும் நடுகல்லில் வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டச்சியம்மன் நடுகல்: கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவா் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தாா். நிறைமாத கா்ப்பிணியாக இருந்தபோது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் அவா் பிரசவ வலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பொதுவாக தியாகத்துக்காக ஆண்களுக்கு மட்டுமே நடுகல் வைக்கப்பட்டு வந்த காலத்தில் கா்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டும் தனியாக வைக்கப்பட்ட நடுகல் இதுதான். அவரை ஒட்டச்சியம்மன் நடுகல் என்று அழைத்து அப்பகுதி மக்கள் வணங்கி வருகிறாா்கள்.

புலிக்கல்: கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே புலிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாட்டை வேட்டையாட வந்த புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்த வீரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த நடுகல்லை நிறுவி இருக்கலாம்.

பாம்புக்காக வைத்த நடுகல்: வடசித்தூரில் நாகப்பாம்பு உருவம் பொறித்த நடுகல் கிடைத்துள்ளது. அந்த கிராம மக்கள் வணங்கி வந்த நாகப்பாம்பு உயிரிழந்ததால் அதன் நினைவாக இந்த நடுகல்லை வைத்து வழிபட்டு வந்து இருக்கலாம் என்றாா்.

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்கள் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் மது பாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 3 போ் கையில் மதுபாட்டில்களுடன் எதிரே வ... மேலும் பார்க்க