செய்திகள் :

கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி

post image

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக சென்றுள்ளது. அப்போது அந்த வழியே சென்ற ஒரு கார் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்றுள்ளது. தொடர்ந்து அவர் வழிவிடாமல் இருந்த காரணத்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிங்காநல்லூர் காவல்துறையினர், உழவர் சந்தை அருகே அந்தக் காரை நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த அன்புசெல்வன் (வயது 43) என்பவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. பி.டெக் பட்டதாரியான அவர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காவல்துறையின் கேள்விக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார்.

மது போதை

குடும்ப பிரச்னையால் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் காரில் இருந்து காவல்துறையினர் ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

அப்போது அவர், ‘இது ஏர்கன்’ என்று கூறியுள்ளார். அது உண்மையிலும் ஏர்கன் தானா என்று கண்டறிய துப்பாக்கி கோவை ஆயுத தொழிற்சாலை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து குடிபோதையில் அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக காவல்துறை

“துப்பாக்கி குறித்து தெரியவரும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

செயின் பறிப்பு சம்பவம்: குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற இரண்டு வடமாநில கொள்ளையர்களைப் போலீஸார் மடக்கி பிடித்தனர்.... மேலும் பார்க்க

`விமான பயணம்; சென்னை ரூட் மேப்’ - என்கவுன்ட்டர் செய்யப்பட்ட `இரானி’ கொள்ளையன் ஜாபரின் பகீர் பின்னணி

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, கடந்த 25-ம் தேதி காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார். அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில... மேலும் பார்க்க

போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்

கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம்ஆகிய இரண்டு பேர... மேலும் பார்க்க

'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் 7 செயின் பறிப்புச் சம்பவங்கள்; ஒருவர் என்கவுன்டர்; மூவர் கைது; என்ன நடந்தது?

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவைச் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன்‌ சென்ன... மேலும் பார்க்க

"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட... மேலும் பார்க்க