செய்திகள் :

கோவை: திருமணம் மீறிய உறவில் பிறந்த குழந்தை விற்பனை; 7 பேர் கைது; வெளியான அதிர்ச்சி பின்னணி

post image

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்குத் திருமணமாகி ஏழு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அங்கு அருகிலிருந்த மோகன்ராஜ் என்பவருடன் சுனிதாவுக்குத் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்களுக்குக் கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் மீறிய உறவில் பிறந்த குழந்தை என்பதால், மோகன்ராஜ் அந்தக் குழந்தையைச் சேலத்தைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

கோவை

சட்ட விரோதமாகக் குழந்தைகளை விற்பனை செய்யும் அந்த கும்பல் குழந்தையைக் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதிக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், குழந்தையை விற்பனை செய்ததில் சுனிதாவுக்கு உடன்பாடு இல்லை. இதுதொடர்பாக இருவருக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் சுனிதா துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்றது.

அதில் குழந்தை சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவை காவல்துறையினர் கன்னியாகுமரி சென்று ஆண் குழந்தையை மீட்டு வந்தனர். இதுதொடர்பாக சுனிதா, மோகன்ராஜ், ரஞ்சிதா, ஆர்த்தி, சுஜாதா, புகழாம்பாள், லில்லி, ஷோபனா ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தை

கைது செய்யப்பட்டதில் 6 பேர் பெண்கள். தமிழகம் முழுவதும் நெட்வொர்க் வைத்து குழந்தைகளை விற்பனை செய்துவரும் இந்த கும்பலில் பெண்கள்தான் அதிகம் உள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Kerala: மருத்துவமனையிலிருந்த உடல் உறுப்பு சாம்பிள்கள் மாயம்; வட மாநில இளைஞர் கைது; என்ன நடந்தது?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நோயாளிகளின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 17 உடல் பாகங்கள் அகற்றப்பட்டன. அந்த உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்தாலஜி டிப்பார்... மேலும் பார்க்க

கழிவுநீர் குழியில் விழுந்து குழந்தை பலி: "ஜல்லிக்கட்டுக்குக் காட்டும் ஆர்வத்தை.." -கொதிக்கும் மக்கள்

கழிவுநீர் குழியில் விழுந்து 4 வயது குழந்தை இறந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்குக் காரணமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ... மேலும் பார்க்க

கோவை: லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த VAO - சேஸ் செய்து பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்துள்ள தொம்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிருஷ்ணசாமி மத்வராயபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்துக்குச் சென்... மேலும் பார்க்க

காதல் திருமணம்; தாலியை அறுத்தெறிந்த பெற்றோர்; உயிரிழந்த பெண் - காவல்துறை விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி தமிழ்ப்பிரியா. இவர்களின் 21 வயது மகள் பூஜா. பள்ளிப்படிப்பை கும்மிடிப்பூண்டியில் முடித... மேலும் பார்க்க

சென்னை: `உனக்கு உன் மனைவி செய்வினை வைத்திருக்கிறாள்' - டெலிவரி ஊழியரை ஏமாற்றிய பெண்

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அக்பர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆச... மேலும் பார்க்க

``பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக... மேலும் பார்க்க