செய்திகள் :

கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?

post image

சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோதனை நடத்தினார்கள்.

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்

அப்போது முதலாம் குளிர்சாதனப் பெட்டியில், ஒரு கைப்பை இருந்துள்ளது. அதைத் திறந்து பார்த்தபோது செயின், நெக்லஸ், வளையல், கம்மல் உள்பட 50 சவரன் நகை இருந்துள்ளது.

மேலும் ரூ.11,000 ரொக்கம், ரூ.25,000 மதிப்பிலான செல்போன் ஆகியவையும் இருந்துள்ளது. ரயில்வே காவல்துறையினர் அதை மீட்டு வைத்திருந்தனர். அந்த செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

ரயில்
ரயில்

காவல்துறையினர் எடுத்துப் பேசியபோது எதிரில் பேசியவர், “என் பெயர் ரவிக்குமார். நான் மனைவியுடன் சென்னையில் இருந்து கோவை வந்தேன். அப்போது நகை, பணம், செல்போன் உள்ளிட்டவை வைத்திருந்த பையை மறந்து வைத்து வீட்டுக்கு வந்துவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.

பிறகு அவர்கள் காவல்துறையினர் அறிவுறுத்தல்படி கோவை ரயில் நிலையத்தில் உள்ள, ரயில்வே பாதுகாப்பு காவல்துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு காவல்துறையினர் அவர்களின் பையைத் திறந்து காட்டியுள்ளனர். அதில் அனைத்து உடைமைகளும் சரியாக இருந்துள்ளன.

நகை ஒப்படைப்பு
நகை ஒப்படைப்பு

இதையடுத்து அவை ரவிக்குமார் மற்றும் அவர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகை, பணம் தொலைந்துவிட்டதோ என்று அதிர்ச்சியடைந்தவர்கள், அது மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க