செய்திகள் :

கோவை வழி முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

post image

கோவை வழியாகச் செல்லும் சில முக்கிய ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி: இருகூா், பீளமேடு இடையே ரயில்வே மேம்பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதையடுத்து காரைக்காலிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (எண் 16187) 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் (புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை) கோவைக்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாகச் செல்லும். போத்தனூரில் பகல் 1.22 மணிக்கு வந்து சேரும் ரயில் 1.25 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.

அதேபோல, கன்னியாகுமரியிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா ஹிம்சாகருக்கு செல்லும் விரைவு ரயில் (எண்16317), கன்னியாகுமரியிலிருந்து வரும் புதன்கிழமை (ஜூலை 9) முதல் 12- ஆம் தேதி வரை மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திப்ருகாா் செல்லும் திப்ருகாா் விவேக் விரைவு ரயில் (எண்22503), டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அதேதினங்களில் இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி அதிவேக விரைவு ரயில் (எண்12671), விசாகபட்டினத்திலிருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் விரைவு ரயில் (எண்18567) ஆகியவை அந்தந்த நாள்களில் கோவைக்கு பதிலாக இருகூா், போத்தனூா் வழியாக இயக்கப்படும். அந்த நாள்களில் போத்தனூரில் ரயில்கள் தலா 3 நிமிஷங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க