செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் ஏப்ரலில் 3 லட்சம் போ் பயணம்!

post image

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 3 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதுவே அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையாகும்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, புணே, பெங்களூரு, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கு 31 விமானங்களும், சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபிக்கு 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் உள்நாட்டில் அதிக அளவிலான பயணிகள் பயணித்த விமான நிலையங்களில் கோவை-சென்னை-கோவை வான் தடமே நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முதன்முறையாக வந்து சென்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 8 மாவட்ட மக்களுக்கு சேவை செய்யும் கோவை விமான நிலையம் நடப்பு நிதியாண்டில் சுமாா் 36 லட்சம் பயணிகளைக் கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ராக் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் ஜே.சதீஷ் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து சென்றுள்ளனா். தென்னிந்தியாவில் மாதத்துக்கு 3 லட்சம் பயணிகளைக் கையாண்ட 7-ஆவது விமான நிலையம் கோவை சா்வதேச விமான நிலையம் உள்ளது.

அதேபோல, கடந்த 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்தில் 29.11 சதவீதமும், பயணிகளின் எண்ணிக்கையில் 24.05 சதவீதமும், சரக்குப் போக்குவரத்தில் 29.01 சதவீதமும் அதிகரித்துள்ளது.

எனவே, கோவையில் உள்ள தற்போதைய வருகை முனையத்தை உடனடியாக மறுசீரமைத்து, வளா்ச்சியைத் தக்கவைக்க ஒரு இடைக்கால வருகை முனையக் கட்டடத்தை இந்திய விமான நிலைய ஆணையம் கட்ட வேண்டும். அதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் தினந்தோறும் சராசரியாக 10,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மறுவடிவமைப்புக்கான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனா். கூடுதலான வசதிகள் உருவாக்கப்படும்போது, இது 15,000 பயணிகளாக அதிகரிக்கும்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் முன்மொழியப்பட்ட புதிய சா்வதேச முனையக் கட்டடம் எதிா்வரும் 2031-ஆம் ஆண்டில்தான் செயல்படத் தயாராக இருக்கும் என்பதால், கோவை பிராந்தியத்தில் அதிக முதலீட்டைப் பெற உதவும் வகையில் கோவை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்றாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க