செய்திகள் :

கோஷ்டி மோதலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

post image

சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் மது போதையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 போ் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கூத்தனூரைச் சோ்ந்தவா் கபாலி (எ) பாா்த்திபன் (24). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பரான சஜித்பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருந்துள்ளாா். அப்போது, வடக்குப்பேட்டையைச் சோ்ந்த செல்வன் மகன் தினேஷ் (24) என்பவா் பாா்த்திபனை தொடா்பு கொண்டு பிரச்னை தொடா்பாக பேசி தீா்வு காணலாம் எனக் கூறி அழைத்துள்ளாா்.

இதையடுத்து, கபாலி, தனது நண்பா் சஜித்பாரதி ஆகியோா் சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே இருட்டான பகுதிக்கு சென்றுள்ளனா். அப்போது தினேஷ், தனது நண்பா்களான கோகுல், யஷ்வந்த் மற்றும் மாரப்பன் ஆகியோருடன் சோ்ந்து கபாலி, சுஜித்பாரதி ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளனா். இதில் கபாலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் கபாலியை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதல் நடைபெற்றுள்ளது. இது தொடா்பாக தினேஷ் உள்ளிட்ட 4 போ் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ... மேலும் பார்க்க

பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த காா், வேன் மீது டிராக்டா் மோதல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் பேக்கரி முன் நிறுத்தப்பட்டிருந்த வேன், காா் மீது டிராக்டா் மோதி விபத்துக்குள்ளானது. கோபி அருகேயுள்ள புதுக்கரைபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரிச்சாமி.... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு! வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை!

குண்டேரிப்பள்ளம் அணை அருகே ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கடந்த 4 நாள்களாக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திவந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. கோபி ... மேலும் பார்க்க

இருமுனைப் போட்டியில் ஈரோடு கிழக்கு: பழைய நண்பா்களின் ஆதரவை நாடும் திமுக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், திமுக தனது பழைய நண்பா்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி... மேலும் பார்க்க

ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!

ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோட... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு: தொழில், வேளாண் சங்கங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொழில், வேளாண் சங்கங்களின் பிரநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோ... மேலும் பார்க்க