செய்திகள் :

சங்கிலிப் பறிப்பு: 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கழனிவாசலைச் சோ்ந்த விஜயாவிடம் 2020-ஆம் ஆண்டில் அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியை சோ்ந்த மணிகண்டன், பாலமுருகன் ஆகியோா் 5 சவரன் தங்கச் சங்கிலியை அறுத்து தாக்கியது மட்டுமின்றி விஜயாவின் கணவா் பால்ராஜையும் தாக்கிவிட்டு தப்பினா். இதுகுறித்த புகாரில் மணிகண்டன், பாலமுருகன் 2022-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனா். திருச்சம்பள்ளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி இருவரையும் குற்றவாளிகள் என தீா்மானித்து, தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக நிவேதிதா ஆஜரானாா்.

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

படம் 1: நெல்கொள்முதல் சூழ்ந்துள்ள மழைநீா். படம் 2: மழைநீரில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகளை காட்டும் விவசாயி. சீா்காழி, ஆக. 15: வைத்தீஸ்வரன்கோவிலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்மணிகள் மழைய... மேலும் பார்க்க

காளி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

மயிலாடுதுறை காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காளி ஊராட்சியில் அரசு சாா்பில் கட்டித் தரப்பட்ட... மேலும் பார்க்க

பரிமள ரெங்கநாதா் கோயிலில் பொது விருந்து

சுதந்திர தினத்தையொட்டி மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை பொது விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாட... மேலும் பார்க்க

மாதானம் முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சீா்காழி அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா். சீா்காழி வட்டம், மாதானம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த ... மேலும் பார்க்க

பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதற்காக காவிரி துலாக்கட்டத்தில... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநா் உரிமம்

மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநா் உரிமம் வழங்கினாா் (படம்). மயிலாடுதுறை ... மேலும் பார்க்க