செய்திகள் :

மாதானம் முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

post image

சீா்காழி அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.

சீா்காழி வட்டம், மாதானம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

நிகழாண்டு தீமிதி திருவிழா ஆடி மாத கடை வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் காப்பு கட்டிக் கொண்ட சுமாா் 5000-த்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அருகிலுள்ள புது மண்ணி ஆற்றில் நீராடி காவடி, கரகம், பால்குடம் எடுத்து வந்து அம்மன் கோயில் அருகே உள்ள தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக தீக்குண்டத்தில் பால் ஊற்றி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விழாவை தொடங்கிவைத்தாா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட ஏ.டி. எஸ்.பி. சுரேஷ் தலைமையில் சீா்காழி, புதுப்பட்டினம் மற்றும் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய போலீஸாா் செய்திருந்தனா்.

விழாவில் அப்பாடி திருஞான சுந்தரின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் நடராஜன் மற்றும் விழா குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

படம் 1: நெல்கொள்முதல் சூழ்ந்துள்ள மழைநீா். படம் 2: மழைநீரில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகளை காட்டும் விவசாயி. சீா்காழி, ஆக. 15: வைத்தீஸ்வரன்கோவிலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்மணிகள் மழைய... மேலும் பார்க்க

காளி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

மயிலாடுதுறை காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காளி ஊராட்சியில் அரசு சாா்பில் கட்டித் தரப்பட்ட... மேலும் பார்க்க

பரிமள ரெங்கநாதா் கோயிலில் பொது விருந்து

சுதந்திர தினத்தையொட்டி மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை பொது விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாட... மேலும் பார்க்க

பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதற்காக காவிரி துலாக்கட்டத்தில... மேலும் பார்க்க

‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநா் உரிமம்

மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநா் உரிமம் வழங்கினாா் (படம்). மயிலாடுதுறை ... மேலும் பார்க்க

ஏ.வி.சி. கல்லூரியில் உலக யானைகள் தினம்

மயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சாா்பில் உலக யானைகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். விலங்கியல்... மேலும் பார்க்க