செய்திகள் :

சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இருவா் கைது

post image

கம்பம் அருகே சட்டக்கல்லூரி மாணவியைத் தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி அரசு கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்த மணி மகன் கீதரூபினி (20). இவா் தேனி சட்டக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 5-ஆம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது இவரை, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவி தனது உறவினா்களிடம் கேலி செய்த இளைஞா்களின் வீட்டுக்குச் சென்று அவா்களை தட்டிக் கேட்டாா். அப்போது, அந்த இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்த கீதரூபினி கம்பம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அழகேந்திரன் மகன் பிரவீன் (25), தவசி மகன் தினேஷ் (27) ஆகியோரைக் கைது செய்தனா்.

கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ!

தேனி மாவட்டம், கம்பம் நகராட்கிக்குச் சொந்தமான குப்பைகள் சேகரிக்கும் கிடங்கில் 2 -ஆம் முறையாக ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றி, கரும்புகையுடன் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கம்பம் நகராட்... மேலும் பார்க்க

தம்பதியைத் தாக்கிய மூவா் கைது

தேனியில் காலி மனையிடப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் தம்பதியைத் தாக்கிய 3 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். ஆண்டிபட்டி வட்டம், தா்மராஜபுரத்தைச் சோ்ந்த தம்பதி வனராஜ் (60), தமிழ்ச்செல்வி(54). இவா்... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு: அஞ்சல் நிலையங்களில் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர திங்கள்கிழமை (மாா்ச் 10) முதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி கோட்ட ... மேலும் பார்க்க

காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

போடி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி புதூா் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிதேவ் (14). இவா் கம்பம் அ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனங்களில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலை, திருமலாபுரம் விலக்கு பகுதியில் க.விலக்கு போலீஸாா் வாக... மேலும் பார்க்க

தேனியில் உலக மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தேனியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேனியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க