செய்திகள் :

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

post image

சட்டவிரோதாமாக அமெரிக்காவுக்கு செல்வதற்காக ரூ. 60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா செல்வதற்காக வாங்கப்பட்ட கடனை எப்படி அடைப்பது என்ற கேள்வியுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் செய்வதறியாது இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முதல்கட்டமாக 104 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். இந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.

பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 104 பேர் இந்த விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்றது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு

ரூ. 40 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை கட்டணம்

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவரான பஞ்சாபை சேர்ந்த குர்ப்ரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில்,

“உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ. 45 லட்சம் கடன் வாங்கி அவரை 6 மாதத்துக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு அனுப்பினோம், கடனை அடைக்க முடியாமல் தற்போது வீட்டை இழந்துவிட்டோம்.

அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் உயிர் வாழ முடியும். இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.

அதேபோல், ஆகாஷ்தீப் சிங் என்ற இளைஞர் அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் அவரை செலவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கு அனுப்பியது யார்?

அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக இளைஞர்களிடம் ரூ. 60 லட்சம் வரை கட்டணமாக பெற்று சட்டவிரோதமாக அனுப்பிய முகவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கூறுகையில்,

“நாடு கடத்தப்பட்ட இளைஞர்களுடன் பேசினேன். பெரும்பாலானவர்கள் துபை பயண முகவர்கள் மூலம்தான் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். தொலைபேசி மூலம் முகவர்கள் பேசி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

முதலில் இளைஞர்கள் துபை அனுப்பப்பட்டு, அங்கிருந்து பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளனர். சிலருக்கு கனடா நாட்டின் விசாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, இளைஞர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பயண முகவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகின்றது.

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியர்க... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வெளியுறவுத... மேலும் பார்க்க

கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்

புது தில்லி: அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்த போது, கை மற்றும் கால்களில் விலங்கு போட்டிருந்தனர் என்று இந்தியர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதி... மேலும் பார்க்க