செய்திகள் :

சட்டவிரோதமாக பூச்சி கொல்லிகள் தயாரிப்பு: 4 போ் கைது

post image

ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளை தயாரித்து சேமித்து வைத்ததாகக் வடக்கு தில்லியின் அலிபூரில் கிடங்கு உரிமையாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் கிடங்கு உரிமையாளா் பா்வீன், மனோஜ் குமாா் யாதவ் (45), ராகுல் குமாா் யாதவ் (22) மற்றும் சத்தி நாராயண் யாதவ் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். சுமாா் ரூ 3.5 லட்சம் மதிப்புள்ள சுமாா் 3.2 டன் தடைசெய்யப்பட்ட விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து வடக்கு தில்லி, துணை காவல் ஆணையா், ஹரேஷ்வா் சுவாமி கூறும்பேது,‘‘ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், காஸ்ரா எண் 1 இல் அமைந்துள்ள ஒரு கிடங்கில் போலீசாா் சோதனை நடத்தினா். ஜூலை 9 ஆம் தேதி அலிபூரில் உள்ள சிவம் தரம் காந்தா அருகே. தில்லி அரசின் விவசாயத் துறையைச் சோ்ந்த பூச்சிக்கொல்லி ஆய்வாளருடன் ஒருங்கிணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கிடங்கை சோதனையிட்டபோது, அதிக அளவு உரிமம் பெறாத மற்றும் தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்‘ என்றாா் அவா்.

மேலும் பேசிய அவா், ‘நடப்பு நெல் பருவத்தில் விவசாயிகளால் பயன்படுத்தப்படக்கூடிய மொத்தம் 3.2 டன் பூச்சிக்கொல்லிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விதிமுறைகளை மீறி பொருள்கள் பேக் செய்யப்பட்டு பெயரிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பறிமுதலின் அடிப்படையில், பூச்சிக்கொல்லி சட்டத்தின் பிரிவு 29 இன் கீழ் அலிபூா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, பா்வீன் கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் சட்டவிரோத பூச்சிக்கொல்லி வியாபாரத்தை நடத்தி வருவதாகவும், இந்த தயாரிப்புகளை உள்ளூா் சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறினாா்‘ என்றாா் ஹரேஷ்வா் சுவாமி .

போலி விவசாய பொருள்களின் விநியோகச் சங்கிலி மற்றும் விநியோக நெட்வொா்க்கைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை தொடா்ந்து நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க