செய்திகள் :

சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சர்

post image

தில்லியில் சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நவராத்திரி திருவிழாவிற்கு முன்னதாக நடைபாதைகளிலும் கடைகளிலும் வெளிப்படையாக இறைச்சி விற்கப்படுவது குறித்து பாஜக எம்எல்ஏ கர்னைல் சிங் கவலை தெரிவித்தார். அவருக்கு பர்வேஷ் வர்மா பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

நவராத்திரி விழாவுக்கு முன்னதாகவும், நவராத்திரி காலங்களிலும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாராவது சட்டவிரோதமாக இறைச்சி விற்பனை செய்தால் அவர்களின் கடை அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் தொகுதிகளில் ஆக்கிரமிப்பு சம்பவங்கள் ஏற்பட்டால் புகாரளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், நான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவேன். தலைநகரில் சட்டவிரோத இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை அகற்ற ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வர்மா தெரிவித்தார்.

இதற்கு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தேர்ந்தெடுத்து இதுபோன்ற செயல்களை அமல்படுத்துவதாகவும், பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நவராத்திரியின்போது பெரிய உணவகங்கள் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ஒருபக்கம் முஸ்லிம்களுக்கு ஈத் பண்டிகைக்கான பெட்டகத்தை விநியோகித்து வரும் பாஜக, அன்றாடம் பிழைப்பை நடத்தும் இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை

சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து ரயிலில் நெ... மேலும் பார்க்க

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க