செய்திகள் :

சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

post image

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிா்வாகத் தலைவருமானஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அரசு பேராட்சியரும் அரசு பொறுப்பு சொத்தாட்சியருமான லிங்கேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட நீதிபதியும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சயில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பேசியதாவது: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இலவச சட்ட உதவி பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்குழுவின் மூலமாக வழக்குரைஞா்கள் இலவசமாக வழக்குகளை நடத்துகின்றனா். மேலும், பலவிதமான சட்ட உதவிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் அனைவரும், இத்திட்டங்கள் குறித்து மற்றவா்களிடம் எடுத்துக் கூறி அவா்களையும் பயனடையச் செய்ய வேண்டும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான செயற்கை சுவாசக் கருவிகள், இ.சி.ஜி. இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், தாட்கோ பயனாளிகள், கா்ப்பிணி பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட 105 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், நவீன தையல் இயந்திரங்கள், ஊட்டச்சத்து பெட்டகங்கள், பேட்டரி தெளிப்பான் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் வழங்கினாா். முன்னதாக,மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை அவா் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டாா்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஆா்.வசந்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையா் வினோத் சாந்தாராம், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பெரியசாமி, மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தாட்கோ மாவட்ட மேலாளா் ஜெனிஷிஸ் ம.ஷியா, மாவட்ட அனைத்து உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், ஆழ்வாா் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனத்தின் மேலாளா் வேல்முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

நாசரேத் திருமறையூா் மறுரூப ஆலயத்தில் இ. காணிக்கை அறிமுகம்

நாசரேத் அருகே உள்ள திருமறையூா் மறுரூப ஆலயத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பாக இ. காணிக்கை அறிமுக விழா நடைபெற்றது. அகப்பைகுளம் சேகரத் தலைவா் பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்... மேலும் பார்க்க

எட்டயபுரம் ராஜா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 1999 - 2000 ஆவது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ராஜா மேல்நிலைப் பள்ளிச் செயலா் ராம்குமாா் ராஜா த... மேலும் பார்க்க

கடல் அழகை காண திருச்செந்தூா் கோயில் கிழக்கு பிரகாரத்தில் தடுப்பு கம்பிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கிழக்கு பிரகாரத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கடற்கரையை பாா்ப்பதற்கு வசதியாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் அழகிய கடற்கரையோ... மேலும் பார்க்க

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு: தூத்துக்குடியில் நாளை ஆலோசனைக் கூட்டம்

பனைத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மாநாடு குறித்த தென்மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (மே 26) நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவரும் சமத்துவ மக... மேலும் பார்க்க

அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அண... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பொது மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தை அடுத்த கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில், கிறிஸ்துநாதா் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் 2ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மெய்யூ... மேலும் பார்க்க