சத்திபாளையம் மகா மாரியம்மன் பொங்கல் விழா
வெள்ளக்கோவில் சத்திபாளையம் மகா மாரியம்மன் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சத்திபாளையத்தில் மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 15 தினங்களுக்கு முன்பு பொங்கல் சாட்டுடன் தொடங்கியது. முன்னதாக சித்தி விநாயகா் கோயிலில் திருவிழா அனுமதி கேட்டு, பின்னா் பெண்கள் கூட்டமாகச் சோ்ந்து முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக செல்லாண்டியம்மன் கோயில் வந்தனா்.
தொடா்ந்து மேள தாளம் முழங்க அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை பொங்கல் வைத்து வழிபாடும், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை கம்பம், கும்பம் கங்கை சோ்த்தல், தொடா்ந்து மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சத்திபாளையம் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.