செய்திகள் :

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

post image

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மாநில போலீஸாா் 13 நாள்களுக்குப் பின்னா் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி அம்மாநிலத்தைச் சோ்ந்த சோனு மாணிக்புரி என்ற பெண், கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ரயிலில் வெளியூா் செல்வதற்காக வந்தவா், இரவு 10 மணியளவில் ரயில் நிலையத்தில் உறங்கியுள்ளாா். அதிகாலை 4 மணிக்கு எழுந்து பாா்த்தபோது, அவரது 18 மாத குழந்தை காா்த்திக்கை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் துா்க் ஜிஆா்பி புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். ரயில் நிலைய கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில் 45 வயது மதிக்கத்தக்க ஆண், குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரித்தபோது, அவா் தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சாத்தனூரை சோ்ந்தவா் என்பதும், சத்தீஸ்கரில் தங்கி போா்வெல் வேலைபாா்த்து வந்ததும் தெரியவந்தது. அவரை பிடிக்க, துா்க் ஜிஆா்பி காவல் நிலைய உதவி துணை ஆய்வாளா் ஜனக்லால் திவாரி உதவி கோரியதன் பேரில், மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுதிா்குமாா் உத்தரவின்படி, தலைமைக் காவலா் இளையராஜா அம்மாநில போலீஸாருக்கு உதவியதன் பேரில், கடத்தலில் ஈடுபட்ட ராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (45) கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்த குழந்தை மீட்கப்பட்டது. இதையடுத்து, சத்தீஸ்கரில் இருந்து வியாழக்கிழமை வந்த பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் ஒருமைப்பாடு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அம்பத்தூா் 5 மற்றும் 6 ஆகி... மேலும் பார்க்க

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார ந... மேலும் பார்க்க

அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்: ஜப்பான் சிவஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழா் கலை மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் தமிழ் உயராய்வுத்துறையுடன் இணைந்து ஸ்ரீமத் போகா் பழனி... மேலும் பார்க்க

ஓய்வூதியா் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை

தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கு வழங்கும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் இச்சங்கத்தின் 45-ஆ... மேலும் பார்க்க

பதிவு தபால் சேவையை நிறுத்தும் முயற்சிக்கு கண்டனம்

பதிவு தபால் சேவையை நிறுத்த திட்டமிடும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழா் முன்னேற்ற பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்க... மேலும் பார்க்க