செய்திகள் :

சத்தீஸ்கர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட கார் - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே பலியான துயரம்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). இவரின் மனைவி பவித்ரா (40), மகள்கள் சௌஜைன்யா (8), சௌமையா (6). சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட்டடப் பொறியாளராக வேலைச் செய்து வந்த ராஜேஷ்குமார், அங்கேயே வீடு எடுத்து மனைவி, மகள்களுடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், திருப்பதி கோயிலுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலை காரில் குடும்பத்துடன் புறப்பட்டிருக்கின்றனர். ஓட்டுநர் லாலா யாது என்பவர் காரை ஓட்டியிருக்கிறார். பஸ்தார் மாவட்டத்தில், கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய கங்கர் நாலா கால்வாயைக் கடக்க முயன்றனர்.

உயிரிழந்த பொறியாளரின் குடும்பம்

அப்போது எதிர்பாராத விதமாக, அவர்கள் பயணித்த கார் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில், காரில் பயணம் செய்த ராஜேஷ்குமார், அவரின் மனைவி மற்றும் இரு மகள்கள் என 4 பேருமே உயிரிழந்தனர். மரக்கிளையில் சிக்கிக் கொண்ட அவர்களின் ஓட்டுநர் உயிரோடு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜேஷ்குமார் குடும்பத்தினரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சொந்த கிராமத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

திருத்தணி: கருக்கலைப்பு செய்த 17 வயது மாணவி உயிரிழப்பு - போலி பெண் டாக்டர் சிக்கிய பின்னணி!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நர்சிங் படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனும் காதலித்து வந்தனர். அந்த சிறுவன், மாணவிக்கு சகோதரர் உறவு முறையாக... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கு: `22 பேர் குற்றவாளிகள்’ -முன்னாள் எம்.எல்.ஏ சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க

கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த... மேலும் பார்க்க

மும்பை: 'தந்தையின் பாதை எனக்கு வேண்டாம்' - தாதா வரதராஜன் மகன் மோகன் மறைவு; தமிழ் அமைப்புகள் இரங்கல்

மும்பையில் வரதராஜன் முதலியார் இறந்த பிறகு அவரது மகன்கள் யாரும் அவரது வழியைப் பின்பற்றாமல் தங்களுக்குத் தனித்தனி வழியை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் மோகன் மட்டும் தொடர்ந்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.மு... மேலும் பார்க்க

விருதுநகர்: ஏலக்காய் தோட்டத்தில் கள்ளச்சாராயம், வனவிலங்கு வேட்டை; 6 பேர் கைதின் பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சே... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!

வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியள... மேலும் பார்க்க