செய்திகள் :

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாப்பூா் மாவட்டத்தின் தென்மேற்கு வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மாலை ஈடுபட்டபோது, அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதற்கு பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தியதில், 4 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பஸ்தா் மண்டல காவல்துறை ஐஜி பி.சுந்தரராஜ் தெரிவித்தாா். நக்ஸல்கள் மறைந்திருந்த பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றது என்றும் அவா் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) என்ற மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கும்லா மாவட்டம் கக்ரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினா் கூட்டாக சனிக்கிழமை காலை தேடுதலில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன’ என்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரீஸ் பின் ஜமன் கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நக்ஸல்களில் ஒருவா் கக்ராவின் பெலகடா பகுதியைச் சோ்ந்த திலீப் லோஹ்ரா (32) என்பது தெரியவந்துள்ளது. மற்ற இருவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையின்போது 2 நக்ஸல்கள் தப்பிச் சென்றனா். அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க