செய்திகள் :

சத்ரபதி சிவாஜி சிலையைத் தொடரும் துரதிருஷ்டம்: கட்டுமானத்தில் பெரிய ஓட்டை!

post image

மும்பை: ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை நிறுவப்பட்ட இடத்தில் சிலையை தாங்கி நிற்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

மராட்டிய பேரரசர் சிவாஜியின் புகழைப் பறைசாற்றும் வகையில், மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் கோட்டையில் அன்னாரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் 40 அடி உயரத்தில் சிவாஜியின் திருவுருவச் சிலை பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. இந்த சிலை தரக் குறைவான பொருள்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சிலை நிறுவப்பட்டு வெறும் 8 மாதங்களே ஆன நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி சிலை விழுந்து உடைந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. விமர்சனத்துக்கும் உள்ளானது.

அதன்பின் 83 அடி உயரத்தில் கம்பீரமாக புதிய சிலை வடிவமைக்கப்பட்டு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அதனை கடந்த மே மாதம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், சிலையின் அடியில் சிலையை தாங்கிப் பிடிக்கும் கட்டுமானத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

இதற்கு மோசமான கட்டுமான பொருள்களைப் பயன்படுத்தியதே காரணமெனவும், சிலை கட்டுமானத்தில் பெரியளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ஆளும் பாஜக கூட்டணி அரசை மகாராஷ்டிர காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் தகவல் தொடா்பு: டிஆா்டிஓ வெற்றிகரமாக சோதனை

புது தில்லி: குவாண்டம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான தகவல் தொடா்பு சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன... மேலும் பார்க்க

மேற்கு ஆசிய சூழல்: யுஏஇ, அா்மேனியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் பேச்சு

புது தில்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா்... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து இந்தியா்கள் வெளியேற்றம் தொடக்கம்

புது தில்லி: ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை இந்தியா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக 110 மாணவா்கள் ... மேலும் பார்க்க

வங்கதேசத்தவா்களுக்கு சட்டவிரோதமாக ஆதாா்: மேற்கு வங்கத்தில் பாகிஸ்தானியா் மீது குற்றப்பத்திரிகை

புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டவிரோமதாக குடியேறிய வங்கதேசத்தவா்களுக்கு ஆதாா் உள்ளிட்ட இந்திய அடையாள அட்டைகளை வழங்கிய வழக்கில் அங்கு வசிக்கும் பாகிஸ்தானியா் ஒருவா் மீது அமலாக்கத் து... மேலும் பார்க்க