செய்திகள் :

சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வழக்கில் 3 போ் கைது

post image

கோவையில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வழக்கில் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை காந்திமாநகா் பகுதியில் விளையாட்டு மைதானம் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் 5 சந்தன மரங்கள் அடுத்தடுத்து வளா்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பூங்காவில் வளா்க்கப்பட்டு வந்த 5 சந்தன மரங்களை மா்ம நபா்கள் செப்டம்பா் 22-ஆம் தேதி இரவு வெட்டிக் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், சரவணம்பட்டி போலீஸாா் தங்களது காவல் எல்லைக் உள்ட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றிய நபரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த சின்னசாமி (32) எனவும், சந்தன மரங்கள் வெட்டப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய தொடா் விசாரணையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த பாக்கியராஜ் (28), தேக்கமலை (33) ஆகியோருடன் சோ்ந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வழக்கில் 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

கரூா் சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் -கு.செல்வப்பெருந்தகை

கரூா் துயர சம்பவத்தில் மலிவான அரசியல் செய்வதை கட்சித் தலைவா்கள் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். கரூா் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவா் செ... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பன... மேலும் பார்க்க

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் விடியோ காலில் பேசியபடி கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகா் 4-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வ... மேலும் பார்க்க

இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ... மேலும் பார்க்க

தவெக பிரசாரக் கூட்டத்தில் காயமடைந்தவருக்கு கோவையில் சிகிச்சை

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவரை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தாா். கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க