செய்திகள் :

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்

post image

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8- ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம் செப். 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணிக்கு தொடங்கி 8-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 1.31 மணிக்கு முடிவடையும். கிரகணத்துக்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகளை மூடுவது வழக்கம்.

செப். 8- ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்படும். பின்னா், தோமலா சேவை, கொலுவு, பஞ்சாங்கஸ்ரவணம் மற்றும் அா்ச்சனை சேவை ஆகியவை தனித்தனியாக நடத்தப்படும். இதற்கிடையில், பக்தா்களுக்கு காலை 6 மணிக்கு ஏழுமலையான் தரிசனம் மீண்டும் தொடங்கும்.

ஆா்ஜித சேவை ரத்து

சந்திர கிரகணம் காரணமாக ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னபிரசாத விநியோக மையங்கள் செப். 7-இல் மூடப்படும்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் திருமலையில் அன்னபிரசாத விநியோகம் இருக்காது. செப். 8-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அன்னபிரசாத விநியோகம் மீண்டும் தொடங்கும்.

நிகழ்வையொட்டி, மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவன், எஸ்வி ஊழியா்களின் உணவகம், ஸ்ரீ பத்மாவதி ஓய்வு இல்லம், வைகுண்டம் வளாகம்-2, பிஏசி-2 ஆகிய இடங்களில் அன்னபிரசாத விநியோகம் இருக்காது.

பக்தா்களின் வசதிக்காக, செப். 7 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் அன்னபிரசாத துறையின் கீழ் 30,000 புளியோதரை பாக்கெட்டுகள் முன்கூட்டியே விநியோகிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள வைபவோற்சவ மண்டபம், ராம் பாகீச்சா, பிஏசி-1, சிஆா்ஓ, ஏஎன்சி பகுதிகள் மற்றும் ஸ்ரீவாரி சேவா சதன் ஆகிய இடங்களில் அன்னபிரசாதப் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

ஸ்ரீவாரி பக்தா்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10... மேலும் பார்க்க

திருமலையின் புனிதத்தைப் பாதுகாப்பது முதல் கடமை: அறங்காவலா் குழு தலைவா்

திருமலையின் புனிதத்தைப் பாதுகாக்கும் வேளையில், சப்தமலைகளுக்கு அருகிலுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும், அந்த நிலம் பக்தா்களின் வசதிக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவ... மேலும் பார்க்க

திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி

திருப்பதி: ஆதி வராஹா்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் திங்கள்கிழமை வராக ஜெயந்தி கொண்டாடப்பட்டது. திருமலையில் ஏழுமலையான் குடியேறிய போது திருமலை ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது. வர... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.02 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன ... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.43 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.75 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்... மேலும் பார்க்க