செய்திகள் :

சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? - வெயிலில் சிரமப்படும் பயணிகள்

post image

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வல்லநாடு, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் டவுன் (நகரப் பகுதிகள்) நோக்கிப் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்கின்றன.

மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும், பயணிகள் வெயிலிலும் மழையிலும் பாதுகாப்பாகக் காத்திருக்க இரண்டு நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதம், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, அந்த இரண்டு நிழற்குடைகளும் அகற்றப்பட்டுவிட்டன.

இதனால் தற்போது, கொளுத்தும் வெயிலில் மக்கள் நிழலின்றி நிற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக, மூத்த குடிமக்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். நிறைய நேரங்களில் மக்கள் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் நேரடியாக வெயில் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், பெரியவர்கள்  அமர்வதற்கும் வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

“நிழற்குடைகள் இருந்தபோது நிழலில் நின்று ஓய்வெடுக்க முடிந்தது. இப்போது வெயிலில் நின்று காத்திருக்க வேண்டியுள்ளது. பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Pahalgam Attack: ``என் வாழ்வில் சிறந்த மனிதர்..'' - திருமணமான 4 நாளில் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை வெளிநாட்டினர் 2... மேலும் பார்க்க

Pahalgam Attack: "விரைவில் தீவிரவாதிகளைப் பிடிப்போம்; தக்க பதிலடி கொடுக்கப்படும்..." - ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்த... மேலும் பார்க்க

`மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயமில்லை; ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்!’ - பட்னாவிஸ் பதில்

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா கல்வியாளர்களும் இத்திட்டத்திற்... மேலும் பார்க்க

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள்!

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள (Pahalgam) சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

PTR: `அது அவருக்கே பலவீனமாக மாறிவிடும்; புரிந்துக் கொள்வார் என...' - பி.டி.ஆருக்கு ஸ்டாலின் அறிவுரை!

நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்... மேலும் பார்க்க

Pahalgam Attack: "தீவிரவாதி சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலா பயணமாக இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் க... மேலும் பார்க்க